புஷ்பா 2 படத்தின் இசை உரிமத் தொகை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் கடந்த வருடம் டிசம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படம் பெரும் வெற்றி படமாக அமைந்தது. அதிலும் புஷ்பா படத்தின் பாடல்கள் உலகம் முழுவதும் புகழ்பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: எதிர்பார்ப்பைத் தூண்டும் மாடர்ன் லவ் சென்னை டிரைலர்!
தற்போது புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படம் இந்தாண்டு இறுதியில் அல்லது 2024 ஆம் ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இப்பாகத்தின் இசை உரிமத்தை டீ - சிரீஸ் நிறுவனம் ரூ.45 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாக தகவல்.