பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வரும் கார்த்தி!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் எம்ஜிஆர் தோற்றத்தில் கார்த்தி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோப்புப்படம்

Published On :

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும். தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். 

அதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் ராஜ் கிரண் இப்படத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்து வருகிறார். அவரது பேரனாக நடிக்கும் கார்த்தியும் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு காட்சியில் கார்த்தி எம்.ஜி.ஆர் கெட்டப்பிலேயே வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு வணிகரீதியிலான உருவாகிவரும் இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.