ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் குஷி பட இயக்குநர்! 

குஷி பட இயக்குநர் ஷிவா நிர்வாணா மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைந்து படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். 

News image
Updated On :9 செப்டம்பர் 2023, 11:50 am IST

சமந்தா-விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான குஷி படத்தினை இயக்கியவர் ஷிவா நிர்வாணா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்திற்கு ஹீஷம் அப்துல் வாஹித் இசையமைத்துள்ளார். இதற்கு முன்னதாக ஷிவா நிர்வாணா இயக்கிய மஜிலி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Story image

கடந்த செப்.1ஆம் தேதி குஷி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. வெற்றி விழாவினையும் படக்குழு சமீபத்தில் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 

மஜிலி படப்பிடிப்பில் சமந்தா - நாக சைதன்யாவுடன் இயக்குநர் ஷிவா நிர்வாணா மற்றும் படக்குழுவினர். 

மஜிலி படப்பிடிப்பில் சமந்தா - நாக சைதன்யாவுடன் இயக்குநர் ஷிவா நிர்வாணா மற்றும் படக்குழுவினர். 

தற்போது இயக்குநர் ஷிவா நிர்வாணா நேர்காணல் ஒன்றில், “அடுத்தபடம் நடிகர் நாக சைதன்யாவுடன்தான். அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் முடிவடையவில்லை. நாக சைதன்யா எனக்கு நல்ல நண்பர்” எனக் கூறியிருந்தார். மேலும் சமந்தா நாக சைதன்யா குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது, “அது அவர்களின் சொந்தப் பிர்சனை. இருவரிடமும் பணியாற்றினாலும் அது குறித்து கேள்வி எழுப்புவதில்லை” எனக் கூறினார். 

Story image

மஜிலி திரைப்படம் சமந்தா நாக சைதன்யா இணைந்து நடித்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படமாகும். தற்போது மீண்டும் நாக சைதன்யாவுடன் இணையும் ஷிவா நிர்வாணா படத்தில் சமந்தா இணைவாரா என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.