டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்தமிழ்நாடு பட்ஜெட்: மக்கள் நல அறிவிப்புகளுக்கு வரவேற்பு... ஆனால்..! - சிபிஎம் அறிக்கை!பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 74.55 அடியாக உயர்ந்துள்ளது.வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழிதவெகவின் மாற்றம், பெயர் மாற்றம் மட்டும்தான்! உதயநிதி விமர்சனம்!செப். 8 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும்! பேரவைத் தலைவர் அறிவிப்புஎங்கிருந்தும் பத்திரப்பதிவு! வரி ஏய்ப்பு செய்வோர் மீது நடவடிக்கை! அமைச்சர் மரியவில்சன்பட்ஜெட்டில் மகளிருக்கு ரூ. 2,500, இலவச சிலிண்டர் அறிவிப்பு இல்லை! மக்கள் ஏமாற்றம்!இனி 150 நாள்கள் கிராமப்புற வேலை திட்டம்! தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு!கூவம், அடையாறு ஆறுகளில் ஆனந்தக் குளியல்! தமிழக பட்ஜெட் 2026பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!
/

விரைவில் அறிமுகமாகும் 3 தொடர்கள்!

தொலைக்காட்சிகளில் விரைவில் அறிமுகமாகவுள்ள தமிழ்த் தொடர்களின் பட்டியலைக் காணலாம். 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:18 pm IST


தொலைக்காட்சிகளில் விரைவில் அறிமுகமாகவுள்ள தமிழ்த் தொடர்களின் பட்டியலைக் காணலாம். 
 
தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடர்களுக்கு  முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பப்படுகிறது. இதனால் முன்னணி தொலைக்காட்சிகள் பலவும், புதிய தொடர்களையும் நிகழ்ச்சிகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றன. 

சிங்கப்பெண்ணே

சன் தொலைக்காட்சியில் சிங்கப்பெண்ணே தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. சன் தொலைக்காட்சி வலைதளத்தில் இந்தத் தொடருக்கான அதிகாரப்பூர்வ முன்னோட்ட (புரோமோ) விடியோ வெளியாகியுள்ளது.

Story image

இதில் கிராமத்துப் பெண் பாத்திரத்தில் நடிகை மனீஷா மகேஷ் நடிக்கிறார். கிராமத்தில் சுட்டித்தனங்கள் செய்யும் குறும்புக்கார பெண்ணாக அவர் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்ணான கண்ணே தொடரை இயக்கிய தனுஷ் இந்தத் தொடரையும் இயக்குகிறார். 

Story image

நளதயமந்தி

இதேபோன்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரியங்கா நல்காரி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் நளதயமந்தி தொடர் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியங்கா நல்காரி.

ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் நாயகியாக நடித்து வந்தார். சீதா ராமன் தொடரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவந்த சமயத்தில், திடீரென தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து சிறிய இடைவேளைக்குப் பிறகு நளதமயந்தி தொடரில் நடிக்கிறார். 

Story image

ஏழைப்பெண்ணாக வரும் பிரியங்கா, அம்மா நடத்திவந்த உணவகத்தில் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளித்து வருகிறார். மறைந்த அம்மாவின் ஆசைக்காக அவ்வாறு செய்து வருகிறார். திருமணத்துக்குப் பிறகும் ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவளிக்க அனுமதிக்கும் கணவனை எதிர்பார்த்து அவர் காத்திருக்கிறார். அப்போது நாயகன் அறிமுகம் நடக்கிறது.

சந்தியா ராகம்

மேலும், ஜீ தமிழில் சந்தியா ராகம் என்ற தொடரும் புதிதாக ஒளிபரப்பாகவுள்ளது. அண்ணா தொடரில் நடித்த வி.ஜே. தாரா இத்தொடரில் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். அக்கா, தங்கை இடையேயான பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதையம்சத்துடன் சந்தியா ராகம் ஒளிபரப்பாகவுள்ளது.

Story image

ஒருத்தி பட்டாம் பூச்சி, ஒருத்தி தொட்டால் சினுங்கி என பாடலிலேயே அக்கா - தங்கை பாத்திரங்களை விளக்கும் வகையில் வெளியாகியுள்ள முன்னோட்ட விடியோ பலரைக் கவர்ந்துள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.