நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நாளை திரையரங்குகளில் வெளியாகும் முக்கிய திரைப்படங்கள்!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதைக் காண்போம்.

News image

கோப்புப்படம்

Updated On :27 செப்டம்பர் 2023, 8:11 pm IST

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய திரைப்படங்கள் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. அவை எந்தெந்த திரைப்படங்கள் என்பதைக் காண்போம்.

சந்திரமுகி - 2

சந்திரமுகி படத்தின் 2ஆம் பாகம் நாளை(செப்.28)  வெளியாகிறது. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி, நகைச்சுவை நடிகர் வடிவேலு முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இறைவன்

தனி ஒருவன் படத்தில் இணைந்து நடித்த நயன்தாராவும் ஜெயம் ரவியும் மீண்டும் சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் இறைவன். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்துக்கு தணிக்கைத் துறையினர் ’ஏ’ சான்றிதழை வழங்கியுள்ளனர். ரன்னிங் டைம் 2மணி நேரம் 33 நிமிடங்கள்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம்  நாளை(செப்.28) தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

சித்தா

சு.அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த், ‘சித்தா’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடித்திருக்கிறார். சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படம் நாளை(செப்.28)  வெளியாகிறது.

பார்க்கிங் திரைப்படம் நாளை வெளியாக இருந்த நிலையில், வெளியீட்டுத் தேதியை படக்குழு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.