எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது நடவடிக்கையில் சந்தேகம்: எடப்பாடி பழனிசாமிஉதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

தீவிர உடற்பயிற்சியில் சூர்யா - ஜோதிகா!

நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் இணைந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்ட விடியோ வைரலாகியுள்ளது.

News image
Updated On :3 ஏப்ரல் 2024, 11:34 am IST

உடலைப் பராமரிக்கும் நடிகர்களில் உதாரணமாக இருப்பவர் நடிகர் சூர்யா. வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முதல் சிக்ஸ்பேக் நாயகனாக ஆச்சரியப்படுத்திய சூர்யா, இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார்.

தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர், உடலை வளைத்து தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்யும் விடியோக்களை அடிக்கடி வெளியிடுவார். அந்த வகையில், முதல்முறையாக, அவரும் சூர்யாவும் இணைந்து உடற்பயிற்சி செய்த விடியோவை வெளியிட்டுள்ளார்.

இந்த விடியோவைப் பார்த்த பலரும், இணைகள் என்றால் இப்படி இருக்க வேண்டும் என அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

ஜோதிகா நடிப்பில் இறுதியாக வெளியான காதல் தி கோர், சைத்தான் ஆகிய படங்கள் வெற்றிப்படங்களானது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படத்திற்குத் தயாராகி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.