கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி பிப்.23 ஆம் தேதி வெளியான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படம் கேரளத்தைவிட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று வசூலைக் குவித்து வருகிறது.
முதல்வாரத்தில் கவனம் பெற்ற இப்படம் இதுவரை தமிழகத்தில் 500 திரைகளுக்கு மேல் திரையிடப்பட்டுள்ளது.
இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாகக் கூறப்படுகிறது. மலையாள சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஒரு மலையாளப் படம் தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும், மலையாள சினிமா வரலாற்றிலேயே ரூ. 200 கோடி வசூலித்த முதல் மலையாளப் படம் என்கிற சாதனையைப் அடைந்த மஞ்ஞுமல் பாய்ஸ் கடந்த வெள்ளிக்கிழமை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
தற்போது, தெலுங்கிலும் இப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்று வருவதால், அங்கும் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.