காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஏப்ரல் 2024, 4:26 pm IST

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடர் இந்த வார இறுதியில் நிறைவடைகிறது. இந்த தொடர் கடந்த ஜூலை 12, 2021 முதல் ஒளிப்பரப்பாகி வந்த நிலையில், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தமிழும் சரஸ்வதியும் தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் நிறைவடையவுள்ளதால், மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த மோதலும் காதலும் தொடர் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கும் நடிகர் திரவியத்தின் புதிய சீரியலான வீட்டுக்கு வீடு வாசப்படி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

Story image

வீட்டுக்கு வீடு வாசப்படி தொடரில், நடிகர் திரவியமிற்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடிக்கிறார். மேலும், இத்தொடரில் பாரதி கண்ணம்மா தொடரில் அகிலன் பாத்திரத்தில் நடித்த சுதிஷ், அவினாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.

இத்தொடரில் வில்லியாக பாண்டவர் இல்லம் தொடரில் மல்லிகா பாத்திரத்தில் நடித்த நடிகை ஆர்த்தி நடிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.