மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

ஓடிடியில் வரவேற்பைப் பெறும் உள்ளொழுக்கு!

நடிகைகள் பார்வதி, ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்றுள்ளது.

News image
Updated On :3 ஆகஸ்ட் 2024, 3:22 pm IST

நடிகைகள் பார்வதி, ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் ஓடிடி வெளியீட்டில் கவனம் பெற்றுள்ளது.

மலையாள நடிகை பார்வதி தமிழில் பூ படத்தின் மூலம் அறிமுகமானார். பின், தனுஷுடன் மரியான் படத்தில் நடித்திருந்தார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகை பார்வதிக்கு 'டேக் ஆஃப்' மலையாளப் படத்துக்கு தேசிய விருதும் கேரள அரசின் மாநில விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். பா. இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படம் ஆக.15 வெளியாகவுள்ளது.

இதற்கிடையே, பார்வதி மற்றும் ஊர்வசி நடிப்பில் வெளியான உள்ளொழுக்கு திரைப்படம் விமர்சகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றிருந்தது. ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரூ.4.5 கோடி வரை வசூலித்தது.

இந்த நிலையில், ஆக.1 ஆம் தேதி இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. ஓடிடியில் பார்த்த பலரும் பார்வதி மற்றும் ஊர்வசியின் நடிப்பையும் படத்தின் கதைக் கருவை பாராட்டி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.