பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அரசியல் காரணங்களால் தேசிய விருதில் சார்பட்டா புறக்கணிப்பு: பா.இரஞ்சித் குற்றச்சாட்டு!

இயக்குநர் பா.இரஞ்சித் சார்பட்டா பரம்பரை படத்துக்கு வேண்டுமென்றே தேசிய விருதுகள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

News image

சார்பட்டா பரம்பரை போஸ்டர், பா.இரஞ்சித்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 3:20 pm IST

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை திரைப்படம் 2021-ல் ஓடிடியில் நேரடியாக வெளியானாலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதிலும் நாயகனாக ஆர்யாவே நடிக்கிறார்.

Story image

இதற்காக, ஆர்யா கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தங்கலான் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் பா. இரஞ்சித் பேசியதாவது:

சார்பட்டா பரம்பரை வெற்றிப் பெற்ற படமாக நாம் கொண்டாடும் அதே சமயத்தில் அதன் இரண்டாம் பாதி சரியில்லை என பலரும் விமர்சனம் செய்ததை பார்த்தோம். விருது விழாக்களில் சார்பட்டா பரம்பரை படம் வெளிப்படையாக நிராகரிக்கப்பட்டது.

கிரிட்டிக்ஸ் விருதில் சார்பட்டா பரம்பரை பல விருதுகள் பெற்றன. அப்படி வாங்கினால் நிச்சயமாக தேசிய விருதும் தருவார்கள். ஆனால் நம்முடைய தேசிய விருது பட்டியலில் சார்பட்டா பரம்பரை உள்ளேயே போக முடியவில்லை.

இந்த விருதுகளுக்கு சார்பட்டா பரம்பரை தகுதியில்லாததா? தனது கருத்தின் அடிப்படையில் இதை நிராகரிக்கிறார்கள். படத்துக்கு வெளியே நான் பேசும் கருத்துகளின் அடிப்படையில் இதையெல்லாம் ஒருவன் தீர்மானிக்கிறான்.

வேண்டுமென்றே எனது வேலையை மதிக்கக் கூடாதென சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். இந்த வெறுப்பை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றார்.

தங்கலான் திரைப்படத்தில் தங்கம் பூர்வக்குடிக்கு சொந்தமானது என்று படமாக்கியுள்ளார். இது நல்ல விமர்சனங்களைப் பெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.