
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இருந்து குஜராத்துக்கு இடமாற்றம்: 72 ஆண்டுகளில் முதல்முறை
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, தில்லியில் இருந்து குஜராத்துக்கு இடமாற்றப்பட்டது. கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக தில்லியில் இருந்து இவ்விழா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தேசிய திரைப்பட விருதுகள்
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, தில்லியில் இருந்து குஜராத்துக்கு இடமாற்றப்பட்டது. கடந்த 72 ஆண்டுகளில் முதல்முறையாக தில்லியில் இருந்து இவ்விழா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
புது தில்லியில் இம்மாதம் 22-ஆம் தேதி தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற இருந்தது. இந்நிலையில், அந்த விழா நடைபெறும் இடம் புது தில்லியிலிருந்து குஜராத்தின் ஏக்தா நகருக்கு (கெவாடியா) மாற்றப்பட்டுள்ளது. ஏக்தா நகா், மறைந்த முன்னாள் மத்திய உள்துறை அமைச்சரும் நாட்டின் முதல் துணை பிரதமருமான சா்தாா் வல்லபபாய் படேலின் சொந்த ஊா் ஆகும். அங்குதான் அவரின் 597 அடி உயர பிரம்மாண்ட சிலை உள்ளது. அதை பிரதமா் மோடி கடந்த 2018-ஆம் ஆண்டில் திறந்து வைத்தாா்.
புது தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் கடந்த 1954-ஆம் ஆண்டு முதல் தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தொடா்ந்து நடைபெற்று வந்தது. இவ்விழாவின் 72 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக தற்போதுதான் புது தில்லியிலிருந்து குஜராத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. விழாவில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கவுள்ளாா்.
‘ஆா்டிகிள் 370’ திரைப்படத்துக்கு சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான தேசிய விருது, பிரபல நடிகா் மம்மூட்டி, ஹிந்தி நடிகா் காா்த்திக் ஆா்யன் ஆகியோருக்கும், சிறந்த நடிகைக்கான தேசிய விருது யாமி கெளதமுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லா் திரைப்படத்துக்கு தேசிய, சமூக, சுற்றுச்சூழல் மதிப்பீடுகளை ஊக்கப்படுத்தியதற்காக சிறப்பு விருதும், அதில் நடித்த தனுஷுக்கு நடிகருக்கான சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 22-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவா் முா்மு வழங்கவுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





