FOLLOW US

ON GOOGLE DISCOVER

9 தேசிய விருதுகளை வென்ற தமிழ்த் திரைப்படங்கள்! தமிழ் மறுமலர்ச்சிக்காக உழைத்தவர் மறைமலையடிகளார்: மு.க. ஸ்டாலின்தனுஷின் ராயன் படத்துக்கு தேசிய விருது..! சிறந்த தமிழ்ப் படமாகத் தேர்வு! அம்மா உணவகங்களை தினசரி பயன்படுத்துவோர் எண்ணிக்கை உயர்வு- சென்னை மாநகராட்சி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே மீது மை வீசித் தாக்குதல்!வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது விக்ரம்-1 ராக்கெட்!விரைவில் நாட்டில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள்! ஆர்பிஐ திட்டம்!
/

தேசிய விருது பெறும் ஜிவி பிரகாஷ்! தொடர்ந்து 2-வது முறை!

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

News image

ஜிவி பிரகாஷ்

Updated On :18 ஜூலை 2026, 8:39 pm IST

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பில் சிறந்த பின்னணி இசைக்கான விருது ஜிவி பிரகாஷ் குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

72-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு இன்று வெளியானது. இதில், 2024 ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகராக மம்மூட்டி, சிறந்த நடிகையாக யாமி கௌதம் என பலரும் விருதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களுக்கு மொத்தமாக 10 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 1 விருது ‘ப்ளூ’ என்கிற ஆவணப்படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் குமார், கடந்தாண்டு வாத்தி (2023) படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான (பாடல்கள்) தேசிய விருதை வென்றிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்தாண்டும் ஒரு தேசிய விருதை அவர் வென்றுள்ளார்.

அமரன் (2024) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது ஜிவி பிரகாஷுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிவி பிரகாஷ் வாங்கவிருக்கும் மூன்றாவது தேசிய விருது இது என்பது குறிப்பிடத்தக்கது. 68வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் சூரரைப் போற்று (2020) படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை அவர் வென்றிருந்தார்.

Summary

GV Prakash wins a National Award for the second consecutive year!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.