மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிக் பாஸ் 8: முதல்முறையாக கோபமடைந்த ரஞ்சித்! கண்ணீர் விட்ட ஜாக்குலின்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் முதல்முறையாக கோபமடைந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 4:00 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் ரஞ்சித் முதல்முறையாக கோபமடைந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் மீதும் கோபமடையாத நபராக ரஞ்சித் பார்க்கப்படும் நிலையில், ஜாக்குலின் பேசியதில் கோபமடைந்து போட்டியை விட்டு வெளியேற முனைந்துள்ளார்.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 9வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்தில் பாடகர் ஜெஃப்ரி கேப்டனாக உள்ளார். இந்த வாரத்தில் டெவில்களும் ஏஞ்சல்களும் டாஸ்க்கை போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

ஏஞ்சல் அணியில் ரஞ்சித், வி.ஜே. விஷால், அன்ஷிதா, ஆர்.ஜே. ஆனந்தி, பவித்ரா ஜனனி, ஜெஃப்ரி, ரயான் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். டெவில்களாக செளந்தர்யா, ஜாக்குலின், முத்துக்குமரன், ராணவ், சாச்சனா, மஞ்சரி, தர்ஷிகா, தீபக், அருண் பிரசாத் உள்ளிட்டோர் உள்ளனர்.

டெவில்களின் வேலை, ஏஞ்சல்களை பொறுமை இழக்கச் செய்து, அவர்களிடம் இருந்து ஸ்டார்களைப் பெறவேண்டும். ஏஞ்சல்கள், தங்களுக்கு எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் அமைதி காக்க வேண்டும்.

நேற்று டெவில்களாக இருந்தவர்கள் இன்று ஏஞ்சல்களாகவும், இன்று ஏஞ்சல்களாக இருந்தவர்கள் டெவில்களாகவும் மாறி போட்டியை விளையாட வேண்டும் என பிக் பாஸ் உத்தரவிட்டார்.

கோபமடைந்த ரஞ்சித்

நேற்று ஏஞ்சல் குழுவில் இருந்த ரஞ்சித், ஜெஃப்ரி உள்ளிட்டோர் டெவில்களாக மாறி விளையாடுகின்றனர். இதில் இம்முறை ஏஞ்சலாக உள்ள ஜாக்குலினிடம் உள்ள இதயங்களைப் பறிப்பதற்கு, அவரைக் கோபப்படுத்தும் வகையிலான செயல்களைச் செய்கின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த ஜாக்குலின் ஏஞ்சல் என்பதை மறந்து டெவில்களிடம் கத்துகிறார். போட்டியை எல்லைக்குட்பட்டு விளையாடத் தெரியவில்லை, அப்பா ஸ்தானத்தில் வைத்துப் பார்த்த ரஞ்சித் இப்படி நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியவில்லை என ஜாக்குலின் கத்துகிறார்.

இதற்கு பதிலளித்த ரஞ்சித், ’இது போட்டிமா, அதற்காகத்தான் நான் உன்னைக் கோபப்படுத்துவது போன்று நடந்துகொண்டேன்’ என விளக்கமளிக்கிறார். அப்போது கோபமடைந்த ரஞ்சித், தான் வென்ற இதயங்களை பறித்து வீசிவிட்டு, போட்டியிலிருந்து விலகுகிறார். இது தொடர்பான முன்னோட்ட காட்சிகளும் வெளியாகியுள்ளன.

ஜாக்குலின் போட்டியை புரிந்துகொள்ளாமல் நாடகமாடுவதாகவும், இதனால் ஏஞ்சல்களும் டெவில்களும் போட்டியின் சாராம்சமே சீர்கெடுவதாகவும் ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.