காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

என்னுடைய உலகம் நீதான்..! மனைவி பிரியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய அட்லி!

இயக்குநர் அட்லி தனது மனைவி பிரியாவுக்கு நெகிழ்ச்சியாக பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அட்லி, பிரியா. - படங்கள்: இன்ஸ்டா / அட்லி

Published On :

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக இருந்து பின்னர் நடிகர் விஜய்யுடன் ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குநர் அட்லி.

ஹிந்தியில் ஷாருக்கானை இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ.1000கோடிக்கும் அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

நடிகை பிரியாவை காதலித்து வந்த அட்லி கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இந்தத் தம்பதிகளுக்கு 2023இல் ஓர் ஆண்குழந்தை பிறந்தது.

இன்று பிரியாவின் பிறந்தநாளை முன்னிட்டு இயக்குநர் அட்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

அட்லி தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

எனதருமை பாப்பா பிரியா அட்லிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீ எனது மகள், எனது அன்பு, எல்லாமே நீதான். எல்லாமே இருந்தாலும் நீ இல்லாவிட்டால் அது முழுமை பெறாது. நீதான் எனது பலம், வெற்றி, கௌரவம், அன்பு எல்லாமே. உன்னுடைய பாய்ஸ்களிடம் இருந்து உனக்கு மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துகள். நான், மீர், பெக்கி, சோக்கி, காஃபி. லவ் யூ. நீதான் எங்களது உலகம். உன்னை பெருமிதம் படுத்துவோம் எனக் கூறியுள்ளார்.

இயக்குநர் அட்லியை அவரது நிறத்தினை வைத்து பலரும் கிண்டல் செய்துள்ளார்கள். இருந்தும் அதையெல்லாம் தாண்டி கமர்ஷியல் படங்களில் அசத்தி வருகிறார்.

பிரியா அட்லி ஹிந்தியில் தெறி படத்தின் ரீமேக்கான பேபி ஜான் படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.