சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

ரஜினி - மணிரத்னம் படம் உறுதி?

ரஜினி - மணிரத்னம் படம் குறித்து...

News image
Updated On :9 டிசம்பர் 2024, 2:36 pm IST

ரஜினிகாந்த் - மணிரத்னம் கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் இணைந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதேநேரம், இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

கூலிக்குப் பின் ஜெயிலர் - 2 படத்தில் நடிகர் ரஜினி இணைவார் என உறுதியான தகவல்கள் வெளியான நிலையில், நடிகர் ரஜினிகாந்த் - இயக்குநர் மணிரத்னம் கூட்டணி உறுதியானதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12 ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அன்றைய நாளில் கூலி அப்டேட், ஜெயிலர் - 2 அறிவிப்புடன் மணிரத்னம் படத்திற்கான அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி படத்திற்குப் பின் இக்கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.