4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

வீர தீர சூரனில் அந்தக் காட்சியை எடுத்து முடித்ததும் கண்ணீர் விட்டேன்: சுராஜ் வெஞ்ரமூடு

வீர தீர சூரன் குறித்து சுராஜ் வெஞ்ரமூடு...

News image

சுராஜ் வெஞ்ரமூடு

Updated On :19 டிசம்பர் 2024, 11:24 am

நடிகர் சுராஜ் வெஞ்சரமூடு வீர தீர சூரன் படத்தில் இடம்பெற்ற முக்கியமான காட்சி குறித்து பேசியுள்ளார்.

சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் வீர தீர சூரன் - பாகம் 2.

இரு பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு மதுரையில் நிறைவடைந்தது. தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய சுராஜ் வெஞ்சரமூடு, “வீர தீர சூரனில் உள்ள 16 நிமிட சிங்கிள் ஷாட் காட்சியில் எனக்கு பெரிய அனுபவம் கிடைத்தது. அக்காட்சியில், சண்டை, வசனம், நடிப்பு, ஒரு விபத்து என எல்லாம் இடம்பெற்றிருக்கும். ஒத்திகை பார்த்து அக்காட்சி எடுக்கப்பட்டது. ஒருமுறை சரியாக எடுத்துவிட்டோம்.

ஆனால், சின்ன குறை இருந்தது. உடனே, இயக்குநர் அழுதபடி இன்னொரு முறை எடுக்கலாம் என எங்களிடம் கேட்டுக்கொண்டார். மீண்டும், அதே சிங்கிள் ஷாட்டில் நடித்தோம். சரியாக எடுத்து முடித்ததும் எனக்கும் கண் கலங்கிவிட்டது. அப்படியொரு காட்சி அது. இயக்குநர் உள்பட அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிக் கொண்டாடினோம். வீர தீர சூரன் கம்பீரமான சினிமாவாக இருக்கும்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.