மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். நல்ல வரவேற்பினைப் பெற்ற பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார் விக்ரம். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கிய சு.அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த ‘சித்தா’ கடந்தாண்டு செப்டம்பரில் வெளியானது. குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து உருவாகியுள்ள ‘இப்படம் திரையரங்குகளில் வெளியாகி மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றது.
இதையும் படிக்க: தென்னிந்திய ஆலியா பட்: ரசிகர்களின் அன்பு மழையில் கன்னட நடிகை!
விக்ரம் 62 படத்தினை சித்தா இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்கவிருக்கிறார். அதன் அற்விப்பு டீசர் முன்னமே வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளார். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
வித்தியாசமான கதை சொல்லல் பாணி இருக்குமென நடிகர் எ.ஜே.சூர்யா இயக்குநரை புகழ்ந்துள்ளார். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த அனைத்து படங்களும் (ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், மார்க் ஆண்டனி) ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.