இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கார்த்தியின் 25-வது படமான ஜப்பான் தோல்விப்படமாக அமைந்ததுடன் விமர்சகர்களிடையே கடுமையான எதிர் வினைகளைப் பெற்றது.
இந்நிலையில், ராஜு முருகன் அடுத்ததாக இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: மறுவெளியீட்டுக்குத் தயாராகிறது கில்லி!
எஸ்.ஜே.சூர்யா நடித்த மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் பெரிய வெற்றிப் படங்களாகின. இதில், எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது, விகரம் - 62, எல்ஐசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.