ரூ. 16 லட்சம் கொண்ட பணப் பெட்டியை எடுத்துச் சென்றது இவர்தான்! அவரில்லை!

பிக் பாஸ் சீசன் 7-ல் பூர்ணியா ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை  எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.
ரூ. 16 லட்சம் கொண்ட பணப் பெட்டியை எடுத்துச் சென்றது இவர்தான்! அவரில்லை!
Published on
Updated on
1 min read

பிக் பாஸ் சீசன் 7-ல் பூர்ணியா ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை  எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்.

அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய இந்த சீசன், 90 நாள்களை கடந்து இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ஏழு சீசன்களாக தொகுத்து வழங்குகிறார்.

மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில், விஷ்ணு, அர்சனா, தினேஷ், மணிசந்திரா, மாயா, பூர்ணிமா, விசித்ரா, விஜய் ஆகிய 8 பேரை தவிர பிற போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

‘டிக்கெட் டூ பைனல்’ டாஸ்கில் வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் உள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் வழக்கம் போல் 14-வது வாரத்தில் வைக்கப்படும் பணப்பெட்டி  வைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் 8 போட்டியாளர்களில் யாராவது எடுக்க விரும்பினால் பணப்பெட்டியில் இருக்கும் தொகையை எடுத்துக் கொண்டு வெளியேறலாம்.

ஒரு லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டு படிப்படியாக தொகை உயர்த்தப்பட்டும், குறைக்கப்பட்டும் இருந்தது. தொடர்ந்து, படிப்படியாக ரூ. 16 லட்சம் வரை உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், பூர்ணிமா ரவி  ரவி ரூ.16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை  எடுத்துக் கொண்டு சென்றுள்ளதாக இன்று வெளியான முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

நடிகை விசித்ரா ரூ. 13 லட்சம் இருந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது பூர்ணிமா வெளியேறியது உறுதியாகியுள்ளது.

முந்தைய சீசன்களில் கேபிரில்லா, கவின், சிபி, கதிரவன், கேப்ரில்லா, அமுதவாணன் உள்ளிட்டோர் பணப்பெட்டியுடன் நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com