பிக் பாஸ் வீட்டிலிருந்து மிட் வீக் எவிக்ஷனில் வெளியேறிய அடுத்த போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி வரும் ஜன.14 அன்று நடைபெறுகிறது.
பிக் பாஸ் 7 ஆவது சீசனில் கூல் சுரேஷ், பிரதீப் ஆண்டனி, ரவீனா தாஹா, வினுஷா தேவி, விஷ்ணு விஜய், மாயா எஸ்.கிருஷ்ணா, விசித்திரா, யுகேந்திரன் வாசுதேவன், பவா செல்லத்துரை, மணி சந்திரா, அனன்யா உள்பட மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
மேலும், போட்டிக்கு இடையே வைல்டுகார்டு போட்டியாளர்களாக அன்னபாரதி, கானா பாலா, அர்ச்சனா, தினேஷ், ஆர்ஜே பிராவோ ஆகிய 5 பேர் களம் இறங்கினர்.
இந்த வாரம் இறுதி வாரம் என்பதால் பிக் பாஸ் போட்டியில் இருந்து வெளியேறியவர்கள் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அதன்படி வினுஷா, அக்ஷயா, சரவணவிக்ரம், கூல் சுரேஷ், ஜோவிகா ஆகியோர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர்.
சென்ற வாரம் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு பூர்ணிமா ரவி இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். தொடர்ந்து, வார இறுதி எவிக்ஷனில் விசித்ரா வெளியேறினார்.
இந்த வார முதலில் நடைபெற்ற மிட் வீக் எவிக்ஷனில் விஜய் வர்மா வெளியேறிய நிலையில், அடுத்த மிட் வீக் எவிக்ஷனில் விஷ்ணு விஜய் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷ்ணூ விஜய் டிக்கெட் டீ ஃபினாலேவில் டிக்கெட் பெற்று நேரடியாக இறுதி வாரத்துக்குள் நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அன்னபூரணி படத்தை நீக்கியது நெட்பிளிக்ஸ்!
இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்கு தினேஷ், அர்ச்சனா, மாயா, மணி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.