அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

த்ரிஷாவின் முதல் இணையத்தொடர்...! ஓடிடி தேதி அறிவிப்பு!

நடிகை த்ரிஷா முதன்முதலாக நடித்துள்ள இணையத்தொடர் ஓடிடியில் வெளியாகவிருக்குறது.

News image

நடிகை த்ரிஷா

Updated On :9 ஜூலை 2024, 5:36 pm IST

மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் நடித்த 96 திரைப்படம் மாபெரும் ஹிட்டானது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் முன்னணி நடிகையாக பார்முக்கு வந்துள்ளார் த்ரிஷா. விஜய்யுடன் நடித்த லியோ திரைப்படமும் மாபெரும் வெற்றி பெற்றது.

21 ஆண்டுகளாக சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக வலம்வருகிறார். தற்போது கமல் (தக் லைஃப்), அஜித் (விடா முயற்சி) படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் முதன்முறையாக இணையத்தொடரில் நடித்துள்ளார். பிருந்தா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடர் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது.

இந்தத் தொடரினை சூர்யா மனோஜ் வங்கலா இயக்கியுள்ளார். இதில் இந்திரஜித் சுகுமார், ஜெயபிரகாஷ், ரவீந்திர விஜய் நடித்துள்ளார்கள். த்ரில்லர் தொடராக உருவாகியுள்ள இதில் நாயகியாக த்ரிஷா நடித்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.