திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

ஜிப்ரான் இசையில் பாடல் பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா!

சிம்பு தேவன் இயக்கியுள்ள போட் படத்தில் இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார்.

News image

ஜிப்ரான் இசையில் பாடல் பாடியுள்ள இசையமைப்பாளர் தேவா

Updated On :19 ஜூலை 2024, 2:52 pm IST

இம்சை அரசன் 23ஆம் புலிகேசி மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிம்பு தேவன்.  7 வருடங்களுக்குப் பிறகு அவர் புதிய படத்தை இயக்கியுள்ளார். போட் என தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவுவை கவனிக்கிறார்.  முழுக்க முழுக்க கடலை மையமாகக்கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. 

5 மொழிகளில் இதன் வெளியானது. தமிழில் விஜய் சேதுபதி, இந்தியில் ஆமீர் கான், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் கிச்சா  சுதீப், தெலுங்கில் நாக சைதன்யா ஆகியோர் வெளியிட்டனர்.

இந்நிலையில் இந்தப் படத்தின் பாடல் நாளை வெளியாகவிருக்கிறது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடியுள்ளார். கானா பாடல் பாடும் ஒருவர் கிளாசிக்கல் பாடுவது போல அமைக்கப்பட்டுள்ளதாக தேவா கூறியுள்ளார்.

இதன் புரோமோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. முழுமையான பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகும்.

இந்தப் படம் ஆக.2ஆம் தேதியன்று திரையில் வெளியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.