பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

50 வயதில் 2-ஆவது விவாகரத்து? குழப்பும் பாலிவுட் நடிகையின் இன்ஸ்டா பதிவு!

பாலிவுட் நடிகை மலைக்கா அரோரா விவாகரத்து செய்வதாக தகவல் வெளியாகியிருந்தது.

Published On :

மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் நடிகை மலைக்கா அரோரா. நிகழ்ச்சி தொகுப்பாளினியாக இருந்து நடிகையாக மாறினார். நடனத்தினால் ஹிந்தி சினிமாவில் கவனம் பெற்றவர். தில் சே படத்தில் சைய்யா சைய்யா பாடலுக்கும், ஓம் சாந்தி ஓம் படத்திலும் நடனமாடி புகழ்பெற்றார்.

1998இல் தயாரிப்பாளர் அர்பாஜ் கானை திருமணம் செய்து 2017இல் விவாகரத்து பெற்றார். அடுத்ததாக தன்னைவிட வயதில் குறைவான நடிகர் அர்ஜுன் கபூரை 2019இல் திருமணம் செய்தார்.

Story image

தற்போது அர்ஜுன் கபூரை மலைக்கா அரோரா தனது 50ஆவது வயதில் விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் மலைக்கா அரோரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்த ஸ்டோரி ரசிகர்களை குழப்பியுள்ளது.

மலைக்கா அரோரா வைத்த ஸ்டோரியில், “ உங்களை யார் அன்புடனும் மரியாதையுடனும் கருணையுடனும் நடத்துகிறார்களோ அவர்களே உங்களுடன் வாழத் தகுதியானவர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

Story image

இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளார்கள். ஆனால் நடிகையின் மேலாளர் விவாகரத்து செய்திகள் எல்லாம் பொய்யானது, வெறும் வதந்தி மட்டுமே எனக் கூறியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.