
நடிகை அஞ்சலி தன் பிறந்தநாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
கற்றது தமிழ், அங்காடி தெரு, தம்பி வெட்டோத்தி சுந்தரம், இறைவி உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்து தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர் நடிகை அஞ்சலி. எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே பாராட்டுகளைப் பெற்றவர் இன்றும் நல்ல கதாபாத்திரங்களில் முழுமையான நடிப்பை வழங்கி வருகிறார்.
தமிழில் கதைநாயகியாக ’ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடித்த கேங்க்ஸ் ஆஃப் கோதாவரி திரைப்படம் விரைவில் திரைக்கு வருகிறது.
தற்போது, தன் 50-வது படமான ‘ஈகை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், தன் 39-வது பிறந்தநாளை தாய்லாந்தில் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளதை புகைப்படங்களை வெளியிட்டு தெரிவித்துள்ளார். அப்பதிவில், “சூரியனைச் சுற்றி மற்றொரு பயணமும் முடிந்தது. உங்களின் தீராத அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.