உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!ஏய் என்ற வார்த்தை அவைக் குறிப்பில் நீக்க வேண்டும்: அமைச்சர் ராஜ்மோகன்திரிணமூல் தலைவர் பதவியிலிருந்து மமதா நீக்கம்!தமிழகத்தில் 11 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை! விஜய்
/

மீண்டும் வருகிறது சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி!

நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாகவுள்ளது.

News image
Updated On :13 மார்ச் 2024, 4:36 pm IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எப்போதும் புதுமையானதாகவே இருக்கும். அந்தவகையில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், மிஸ்டர் அன்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை , ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், முந்தைய சீசன்களை தயாரித்த மீடியா மேசன்ஸ் நிறுவனம் விஜய் தொலைக்காட்சியில் இருந்து விலகியதாக அறிவித்தது.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கிய அது இது எது நிகழ்ச்சியின் அடுத்த சீசன் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளதால், இந்நிகழ்ச்சி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Story image

அது இது எது நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நிகழ்ச்சி, அதுவும் இந்நிகழ்ச்சியில் வரும் 'சிரிச்சா போச்சு' சுற்றுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் அடுத்த சீசன் அறிவிப்பு எப்போது வரும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, அது இது எது நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியிருப்பது சற்று ஆறுதலை அளித்துள்ளது.

அது இது எது நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் குறித்த தகவல்களை இந்நிகழ்ச்சி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.