இயக்குநர் ஷங்கரின் துணை இயக்குநராக இருந்து தனது முதல் படமான ‘ராஜா ராணி’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் அட்லி. அடுத்து நடிகர் விஜய்யுடன் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தார். பின்னர் பாலிவுட்டில் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தினை இயக்கினார்.
ஜவான் திரைப்படம் ரூ.1140 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. அடுத்து ரூ.3000 கோடி வசூலிக்கும் படத்தினை இயக்க உள்ளதாகவும் நடிகர்கள் விஜய், ஷாருக்கானை வைத்து படமெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தற்போது, அவர் நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், ஜவான் வெற்றிக்குப் பின் அட்லி தன் சம்பளத்தை ரூ.60 கோடியாக உயர்த்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.