ஹிந்தி சினிமாவில் பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது படங்கள் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளைப் பெற்றுள்ளது.
இவர் இயக்கத்தில் வெளிவந்த, ‘கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’, ‘ராமன் ராகவ்’, ’பிளாக் ஃப்ரைடே’ ஆகிய படங்கள் விமர்சகர்களால் பாராட்டுக்களைப் பெற்றது. தமிழில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாகவும் நடித்து அசத்தியிருந்தார். லியோவிலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவரது அடுத்த படமான ‘கென்னடி’ விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
அனுராக் காஷ்யப் நடிகர் ஜிவி பிரகாஷ்குமாரை நாயகனாக வைத்து புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. தற்போது, இத்தகவல் உண்மைதான் என்றும் ஹிந்தியில் தயாராகும் இப்படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.