மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜுன் நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், வருகிற மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
தற்போது, இப்படத்தின் புரோமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, படக்குழுவினர் நேர்காணல்களில் பங்கேற்று கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே, கேரளத்தில் முதல்நாள் படத்தைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதுடன் அதிவேகமாக டிக்கெட்களையும் முன்பதிவு செய்து வருகிறார்கள். முதல்முறையாக, நடிகர் பிருத்விராஜ் படத்திலேயே முன்பதிவு மூலம் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூலித்த படம் என்கிற பெருமையையும் ஆடு ஜீவிதம் அடைந்திருக்கிறது.
மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் இப்படம் வெளியாக உள்ளதால் வசூலில் பெரிய சாதனையைப் படைக்கும் என்றே கருதப்படுகிறது.