இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
ஆனாலும், வித்தியாசமான தோற்றத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலில் வெற்றிப்படமானது.
நடிகை சமந்தாவுக்கும் முக்கிய திரைப்படமாக இருந்தது. இந்த நிலையில், இப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளதால், இப்படத்தை மறுவெளியீடு செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதற்கான, முதல் கட்ட பணிகளைத் துவங்கியுள்ளனர். விரைவில் மறுவெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.