
1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இளையராஜா, 1000 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார்.
இன்றும் அவர் இசையமைப்பில் உருவாகும் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் கவனத்தையும் பெறுகின்றன. சமீபத்தில் வெளியான மலையாளப் படமான மஞ்ஞுமல் பாய்ஸ் திரைப்படத்திலும் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலைப் பயன்படுத்தி பெரிய வெற்றியைப் பெற்றனர்.
இதனிடையே, கூலி டீசரில் தன் இசை பயன்படுத்தப்பட்டுள்ளதாக இசையமைப்பாளர் இளையராஜா, தயாரிப்பு நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது விமர்சனத்துக்குள்ளானது.
கோடையை கொண்டாடுவதற்கு இசையமைப்பாளர் இளையராஜா மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பாக இளையராஜா சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலானது.
இந்த நிலையில், இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜாவும் மொரீஷியஸ் தீவுக்கு சென்றுள்ளார். மொரீஷியஸ் தீவில் தனது மகன் யுவன்சங்கர் ராஜாவுக்கு, உணவு ஊட்டும் புகைப்படத்தை இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.