நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அனிருத் இசையில் ‘தேவரா’ படத்தின் முதல் பாடல்!

பிரபல தெலுங்கு நடிகர் ஜுனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தின் முதல் பாடல் அப்டேட் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 மே 2024, 8:10 pm IST

ராஜமௌலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெறும் வெற்றி பெற்றது.

தற்போது, ஜுனியர் என்டிஆர் தனது 30வது படத்தில் நடித்து வருகிறார்.பிரபல தெலுங்கு இயக்குநர் கொரடால சிவா இயக்கிவரும் இந்தப் படத்துக்கு ‘தேவரா -1’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.

இந்தப் படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யான் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

தெலுங்கில் அனிருத் 2017இல் இசையமைக்க ஆரம்பித்தார். 2018இல் யு டர்ன், ஜெர்ஸி ஆகிய படங்களுக்கும் 2019இல் கேங்க் லீடர் படத்திற்கும் இசையமைத்தார். இதனைத் தொடர்ந்து 2023இல் ஜுனியர் என்டிஆர்-இன் தேவரா படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்தப் படத்தின் முதல் பாடல் மே-19ஆம் நாள் வெளியாகுமென படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.