நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘டியூன் 2’ ஓடிடியில் எப்போது?

டெனிஸ் வில்லினுவ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற டியூன் -2 படத்தின் ஓடிடி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :15 மே 2024, 4:28 pm IST

டெனிஸ் வில்லினுவ் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியாகியுள்ள டியூன் இரண்டாம் பாகம் மிகப் பெரிய வெற்றியை பெற்றது.

பூமியில் எப்படி பெட்ரோலியமும், டீசலும் முதன்மை எரிபொருளாக உள்ளதோ, அதைப் போன்று "ஸ்பைஸ்" (Spice) எனும் எரிபொருள் அராக்கிஸ் (Arrakis) எனும் கோளில் கிடைக்கிறது.

பால்வெளியில் உள்ள மற்ற கோள்கள் அனைத்தும், இந்த எரிபொருளை உற்பத்தி செய்ய, அராக்கிஸ் கோளில் வாழும் மக்களின் நிலங்களைப் பறித்து, அவர்களை அடிமையாக்குகிறார்கள். இதனால் அங்குள்ள பூர்வகுடிகள் தங்கள் நிலத்தை இந்த ஆளும் வர்க்கத்திடமிருந்து மீட்கப் போராளிகளாகின்றனர்.

நிலத்தின் நிர்வாக உரிமை யாருக்குக் கிடைத்தது? ஹீரோவை ஏன் அந்த அடிமைகள் ‘கடவுள் தேர்ந்தெடுத்தவனாகக்’ கருதுகிறார்கள் என்பதே டியூன் படவரிசைகளின் (Dune Franchise) கதைக்களம்.

டியூன் 2 திரைப்படத்தில் டிமத்தி சார்லமேட், சென்டாயா, பட்டிஸ்டா, ஜாவீர் பார்டென், ரெபேக்கா ஃபெர்குசான் ஆகியோர் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியாகி 500 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.4100 கோடி) வசூலித்து அசத்தியது. இந்தப் படம் வரும் மே.21ஆம் நாள் மேக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

Story image

இந்தியாவில் ஜியோ சினிமாஸில் வெளியாகுமெனவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.