அகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

கடந்த காலங்களில் தவறிழைத்துவிட்டேன்..! உண்மையை ஒப்புக்கொண்ட சமந்தா!

நடிகை சமந்தா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அதில் கடந்த காலங்களில் தவறிழைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

News image

நடிகை சமந்தா

Updated On :5 நவம்பர் 2024, 6:04 pm IST

நடிகை சமந்தா ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து பேசினார். அதில் கடந்த காலங்களில் தவறிழைத்து விட்டதாகக் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயினால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.

நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து, கருத்து வேறுபாட்டின் காரணமாக 2021-இல் விவாகரத்து செய்தனர்.

கடந்த ஆக.8ஆம் தேதி நாக சைதன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் ஹைதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. சில மாதங்களில் திருமணம் நடைபெறவுள்ளது.

சிட்டாடல் தொடர் ரிலீஸை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அதில் சமந்தா கூறியதாவது:

நான் எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் என்னை நானே மிகுந்த சவாலுக்கு உள்படுத்துவேன் என எனக்கு நானே சத்யம் செய்துகொண்டேன். கடந்த காலங்களில் சில தவறுகள் செய்துவிட்டதை ஒப்புக்கொள்கிறேன். நான் நினைத்தது மாதிரி படங்கள் வெற்றியடையவில்லை. என்னுடைய கடைசி சில படங்களில் நான் என்னுடைய சிறந்தவற்றை வழங்கவில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்கிறேன்.

சிட்டாடல்: ஹனி பன்னி தொடரில் எனது கதாபாத்திரம் குறித்து பெருமையாக இருக்கிறது. எனது சினிமா வாழ்க்கையி ல் மிகவும் கடினமான, பல தளங்களில் அமைந்த, சவலான ஒரு கதாபாத்திரம் என்றால் அது இந்தப் படத்தில்தான். ஆனால், அது எப்படி இருக்கிறதென நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.

நடிகை சமந்தா கடைசியாக குஷி படத்தில் நடித்திருந்தார். தற்போது, மா இன்டி பங்காரம் படத்தில் நடித்து வருகிறார். சிட்டாடல் இணையத்தொடர் ஓடிடியில் வெளியானது.

கௌதம் மேனம் இயக்கும் படத்தில் மலையாளத்திலும் சமந்தா அறிமுகமாகவிருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜிக்ரா புரமோஷன் நிகழ்வில் ஆலியா பட் சமந்தாவை இந்தியாவின் முக்கியமான நடிகை என மிகவும் புகழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.