மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியான ஓவியா!

ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் அறிவிப்பு...

News image
Updated On :6 நவம்பர் 2024, 12:42 pm IST

கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் தமிழ்ப் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்பஜன் சிங் திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தமிழில் பிரண்ட்ஷிப் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

ஐபிஎல்லில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியில் விளையாடிய காலத்திலிருந்து தமிழ் மொழியைக் கற்பதிலும் எக்ஸ் தளத்தில் தமிழிலில் பதிவுகளை வெளியிட்டும் தன் தமிழ் ஆர்வத்தை தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், நாயகனாக புதிய தமிழ்ப் படத்தில் டாக்டர் ஜேம்ஸ் மல்ஹோத்ரா என்கிற கதாபாத்திரத்தில் ஹர்பஜன் நடிக்கிறார். ஜான் பால் ராஜ் இயக்கும் இந்தப் படத்திற்கு சேவியர் எனப் பெயரிட்டுள்ளனர்.

Story image

நாயகியாக நடிகை ஓவியாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் விடிவி கணேஷ் மற்றும் ஜிபி முத்து ஆகியோர் நடிக்கின்றனர்.

இதுகுறித்து பதிவிட்ட ஹர்பஜன் சிங், ”என் தங்க தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம். என்னோட அடுத்த தமிழ் படம் சேவியர். உங்களை மகிழ்விக்க வரப்போகுது. உங்க அன்புக்காக வெயிட்டிங்” எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.