அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பிக் பாஸ் 8: முத்துக்குமரனுக்கு எதிராக மாறிய அருண் பிரசாத்!

முத்துக்குமரன் - சாச்சனா இடையே இருப்பது, அற்புதமான உறவு என்றும், இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அர்த்தமற்றது

News image

அருண் பிரசாத் / முத்துக்குமரன் - படம் | எக்ஸ்

Updated On :24 நவம்பர் 2024, 8:55 am

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் பெண்கள் அணியில் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இதைப்போன்று ஆண்கள் அணியிலும் இருவர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

முத்துக்குமரன் சாச்சனாவுக்கு ஆதரவாகப் பேசுவதால் ஆத்திரமடைந்த அருண், முத்துக்குமரன் குறித்து ஆண்கள் அணியில் அவதூறாகப் பேசுகிறார்.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, தன்னை நல்லவன் எனக் காட்டிக்கொள்ள முத்துக்குமரன் எந்த எல்லைக்கும் செல்வான் என ரஞ்சித்திடன் அருண் பிரசாத் புலம்புகிறார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 48 நாள்களைக் கடந்துள்ளது. ஆண்கள் - பெண்கள் என இரு தரப்பினர் இடையே போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் பெண்கள் அணியில் உள்ள சாச்சனாவுக்கு முத்துக்குமரன் நல்ல நண்பனாகத் திகழ்கிறார். அவ்வபோது சகோதரனாக இருந்து சாச்சனாவின் குறைகளை சுட்டிக்காட்டுகிறார்.

ஆனால், சாச்சனா முத்துக்குமரனிடம் பேசுவதே அவர்களின் விளையாட்டு யுக்தி என்றும், ஆண்கள் அணியிலிருந்து தகவலை எடுத்துக்கொண்டு செல்வதற்காகவே முத்துவிடம் பேசுவதாகவும் அருண் பிரசாத் குற்றம் சாட்டுகிறார்.

சாச்சனாவுக்கு ஆறுதலாக முத்துக்குமரன்

இந்நிலையில், நேற்று சாச்சனா அழும்போது பெண்கள் அணியில் உள்ள அனைவரும் அவரை சமாதானம் செய்ய முயற்சி செய்கின்றனர். ஆனால், சாச்சனா எனக்கு முத்து அண்ணனிடம் பேச வேண்டும்போல உள்ளது எனக் கூறுகிறார்.

பின்னர், ஆண்கள் பக்கமிருக்கும் முத்துக்குமரன் பெண்கள் வீட்டிற்கு வரும்போது, அவரைக் கட்டியணைத்து அழுகிறார் சாச்சனா. சகோதரனாக அவருக்கு ஆறுதல் கூறுகிறார் முத்துக்குமரன்.

ஆனால், இதனை விரும்பாத அருண் பிரசாத், தன்னை நல்லவன் எனக் காட்டிக்கொள்வதற்காக முத்து இதையெல்லாம் செய்வதாக விமர்சிக்கிறார். தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் முத்துக்குமரன் செல்வான். பொதுமக்கள் பார்த்துக்கொண்டு உள்ளனர். அவனுடைய முகம் ஒருநாள் கிழியும் எனக் குறிப்பிடுகிறார்.

இந்த விடியோவுக்கு பலரும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். முத்துக்குமரன் - சாச்சனா இடையே இருப்பது, அற்புதமான உறவு என்றும், இதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவது அர்த்தமற்றது எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.