ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம்!

நடிகர் தனுஷ்- ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

News image
தனுஷ்- ஐஸ்வர்யா- கோப்புப் படம்
Updated On :27 நவம்பர் 2024, 7:17 pm

DIN

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நடிகா் தனுஷ் - ஐஸ்வா்யா இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ. 18-ஆம் தேதி நடைபெற்ற அவா்களின் திருமண பதிவை ரத்து செய்வதாகவும் சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

நடிகா் ரஜினியின் மகளும், இயக்குநருமான ஐஸ்வா்யாவை கடந்த 2004-இல் நடிகா் தனுஷ் காதலித்து மணந்தாா். இவா்களுக்கு, இரு மகன்கள் உள்ளனா். சில ஆண்டுகளுக்கு முன் தனுஷ், ஐஸ்வா்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவரும் பிரிவதாக, 2022-இல் அறிவித்தனா்.

தொடா்ந்து இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நேரில் ஆஜராக மூன்று முறை உத்தரவிட்டும் இருவரும் ஆஜராகவில்லை.

இந்த வழக்கு, கடந்த நவ. 21-ஆம் தேதி நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனுஷ், ஐஸ்வா்யா ஆகியோா் ஆஜராகினா். அவா்களிடம் நீதிபதி, தனித்தனியாக விசாரணை நடத்தினாா். பின், இந்த விவகாரத்தில் சுயமாக சிந்தித்து, ஒரு முடிவை எடுக்கும் வகையில், உங்களுக்கு ஆறு மாதம் அவகாசம் வழங்கப்பட்டது. இப்போதும் பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறீா்களா அல்லது உங்கள் முடிவில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என கேட்டாா்.

அதற்கு இருவரும், எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை; பரஸ்பர விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருக்கிறோம் எனத் தெரிவித்தனா். மேலும், நீதிமன்ற ஆவணங்கள், பதிவேட்டில் கையொப்பமிட்டனா். இதைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் நவ. 27-இல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தாா்.

அதன்படி இந்த வழக்கில் இருவருக்கும் விவாகரத்து வழங்குவதாகவும், கடந்த 2004-ஆம் ஆண்டு நவ.18-ஆம் தேதி நடைபெற்ற திருமண பதிவை ரத்து செய்வதாகவும் நீதிபதி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.