
சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி படம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமரன் திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பெரிய நட்சத்திர நடிகராக வளர்ந்துள்ளார். இப்படத்திற்குப் பின் தன் சம்பளத்தையும் ரூ. 60 கோடி வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.
அமரன் படத்தை முடித்தபின் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸின் படமொன்றில் நடித்து வருகிறார். எஸ்கே - 23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: பார்சிலோனா கார் பந்தயம்... பயிற்சியில் அஜித்!
இதைத் தொடர்ந்து, இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தன் 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இக்கூட்டணி குறித்து நீண்ட நாள்களாக தகவல்கள் வெளியாகிக்கொண்டிருந்த நிலையில், நாளை (நவ.28) படத்தின் பூஜை சென்னையில் நடைபெறுவதாகவும் இப்படத்தை பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிப்பதாகவும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.