மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ் மேக்கேதாட்டு அணைக்கு எதிர்ப்பு! பேரவையில் முதல் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் விஜய்!எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு! ரயானை அடிக்கச் சென்ற ராணவ்!

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரயான் - ராணவ் ஆகியோர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

News image

மோதலில் ஈடுபட்ட ரயான் - ராணவ் - படம் | எக்ஸ்

Updated On :28 நவம்பர் 2024, 4:50 pm IST

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் ரயான் - ராணவ் ஆகியோர் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

இன்றைய போட்டியில் விதிகளை மீறியதாக ராணவ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர்களிடம் மிகவும் கடுமையாக நடந்துகொண்ட ராணவ்வை, பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்கள் அடக்க முயன்றனர்.

அப்போது கோபமடைந்த ரயான், ஆத்திரத்தில் ராணவ்வை அடிக்கச் சென்றார். பிக் பாஸ் வீட்டில் இருந்த பலர் தடுத்தும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடையே பரபரப்பு நிலவியது.

விளையாட்டால் விபரீதம்

பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் 53வது நாளான இன்று (நவ. 28) இரண்டாவது நாளாக நீயும் பொம்மை, நானும் பொம்மை டாஸ்க் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான பொம்மையை தேர்வு செய்யலாம், ஆனால் தங்கள் பொம்மையை தேர்வு செய்ய முடியாது. தேர்வு செய்த பொம்மையை டால் ஹவுஸ்ஸில் எடுத்துச்சென்று வைக்க வேண்டும். தங்களுக்கு விருப்பம் இல்லாத பொம்மையை டாஸ் ஹவுஸ்ஸில் சென்று சேராமல் தடுக்கலாம்.

போட்டியாளர்களின் வியூகத்தையும் சகிப்புத்தன்மையையும் சோதிக்கும் வகையில் பொம்மை டாஸ்க் போட்டி வைக்கப்பட்டது.

இப்போட்டியில், ராணவ், தீபக், முத்துக்குமரன், தர்ஷிகா உள்ளிட்டோர் போட்டியிலிருந்து ஏற்கெனவே வெளியேறிவிட்டனர்.

இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியின்போது கோவா கேங் எனப்படும் செளந்தர்யா, ஜாக்குலின், ரயான், ஜெஃப்ரி ஆகியோரின் பொம்மையை வீட்டிற்குள் சென்று சேராமல் தடுக்க வேண்டும் என்ற முனைப்போடு, ஜெஃப்ரி கையில் இருந்த பொம்மையை ராணவ் பிடுங்குகிறார்.

இதனால் கோபமடைந்த ரயான், ராணவ்விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களும் இருவரையும் தடுக்க முயன்றனர். எனினும் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ள முயற்சித்தனர். ரயான் ராணவ்வை அடிக்கச் சென்றதால், பரபரப்பு நிலவியது.

ரயானைத் தடுத்து அழைத்துச்சென்ற ஜாக்குலின், ’ஏன் அவனை அடிக்கச் செல்கிறாய்?’ எனக் கேள்வி எழுப்புகிறார். 'அவன் என்னை அடிக்க வந்தான், அதனால் அவனை நான் அடித்தே தீருவேன்’ என ரயான் பதிலளிக்கிறார்.

இந்தச் சம்பவம் பிக் பாஸ் வீட்டில் இருந்த சக போட்டியாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.