நேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

‘இப்ப ரொம்ப குஷி...’ மாணவிகளுடன் நடனமாடிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடினார்.

Published On :5 அக்டோபர் 2024, 6:30 pm IST

நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் நடனமாடிய விடியோ கவனம் பெற்று வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி, பிரதர் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இறுதியாக, அவர் நடித்த சைரன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பிரதர் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் எம். ராஜேஷும் தொடர் தோல்விகளைக் கொடுத்துள்ளதால் எப்படியாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்புடன் இருக்கிறார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.

முக்கியமாக, பால் டப்பா என்பவர் பாடிய ‘மக்காமிஷி’ பாடல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களுக்கான பாடலாக அமைந்தது.

இப்படம் அக். 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதேநாளில் சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகிறது. இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் வணிகம் பாதிக்கப்படும் என்பதால் பிரதர் தேதியில் மாற்றம் வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக கல்லூரி மாணவிகளுடன் ஜெயம் ரவி மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.