ரூ. 100 கோடி மோசடி: தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார் கைது!தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! இயக்குநர் பாக்யராஜுக்கு நாளை காலை இறுதிச் சடங்கு!கே. பாக்யராஜ் உடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நேரில் அஞ்சலி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம்!கே. பாக்யராஜுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! சாந்தனுவை ஆரத்தழுவி ஆறுதல்!!திமுக கூட்டணியிலிருந்து மதிமுக விலகல்!
/

‘இப்ப ரொம்ப குஷி...’ மாணவிகளுடன் நடனமாடிய ஜெயம் ரவி!

நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் உற்சாகமாக நடனமாடினார்.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:30 pm IST

நடிகர் ஜெயம் ரவி மாணவிகளுடன் நடனமாடிய விடியோ கவனம் பெற்று வருகிறது.

நடிகர் ஜெயம் ரவி, பிரதர் திரைப்படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். இறுதியாக, அவர் நடித்த சைரன் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பிரதர் படத்தின் வெற்றிக்காகக் காத்திருக்கிறார்.

படத்தின் இயக்குநர் எம். ராஜேஷும் தொடர் தோல்விகளைக் கொடுத்துள்ளதால் எப்படியாவது வெற்றியைப் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்புடன் இருக்கிறார். படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றதால், ரசிகர்களிடம் ஆவல் எழுந்துள்ளது.

முக்கியமாக, பால் டப்பா என்பவர் பாடிய ‘மக்காமிஷி’ பாடல் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ்களுக்கான பாடலாக அமைந்தது.

இப்படம் அக். 31 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அதேநாளில் சிவகார்த்திகேயனின் அமரன் வெளியாகிறது. இரண்டு பெரிய படங்களும் ஒரே நேரத்தில் வெளியானால் வணிகம் பாதிக்கப்படும் என்பதால் பிரதர் தேதியில் மாற்றம் வரும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், படத்தின் புரமோஷனுக்காக கல்லூரி மாணவிகளுடன் ஜெயம் ரவி மக்காமிஷி பாடலுக்கு நடனமாடிய விடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.