நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தென்னிந்தியாவுக்கு சொந்தமானவர் ஜான்வி கபூர்..!

தேவரா படத்தின் இயக்குநர் ஜான்வி கபூரை புகழ்ந்து பேசியுள்ளார்.

News image

ஜான்வி கபூர்

Updated On :9 அக்டோபர் 2024, 6:31 pm IST

நடிகை ஸ்ரீதேவி - தயாரிப்பாளர் போனி கபூர் இணையின் மூத்த மகள் நடிகை ஜான்வி கபூர். ‘கோலமாவு கோகிலா’ படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நாயகியாக நடித்து பாராட்டுக்களைப் பெற்றார்.

தெலுங்கில் ஜூனியர் என் டிஆர் உடன் தேவரா படத்தில் நடித்துள்ளார். கொரடால சிவா இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஜான்வி கபூர், சயிப் அலிகான், நந்தமுரி கல்யாண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசை கவனம் பெற்றது. இப்படம் உலகளவில் ரூ. 400 கோடியை நெருங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தேவரா படத்தின் இயக்குநர் ஜான்வி கபூர் குறித்து கூறியதாவது:

எனக்கு வடக்கு, தெற்கு குறித்த விஷயங்களின்மீது நம்பிக்கையில்லை. இங்குள்ள மக்கள் ஜான்வியை தென்னிந்தியாவைச் சேர்ந்தவரென்றே நம்புகிறார்கள். ஏனெனில், ஸ்ரீ தேவி மேடம் எங்களுடையவர்கள் எனக் கருதுகிறார்கள். அதனால், இங்கு கிராமங்களில்கூட ஜான்வியை தங்களது சொந்த மகள் என்றே கருதுகிறார்கள்.

ஜான்வி தெலுங்கில் நடிக்க நாங்கள் பல காலம் காந்திருந்தோம். ஜூனியட் என்.டி.ஆரும் ஜான்வியும் சிறந்த ஜோடியாகவே கருதுகிறோம் என்றார்.

தேவரா படத்துக்குப் பிறகு ஜான்வி கபூர் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஹிந்தியில் சன்னி சன்ஸ்காரி கி துல்சி குமாரி, தெலுங்கில் ஆர்சி16 படங்களில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.