
நடிகர் நானியின் 33-வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் நானி, வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் உடையவர்.
நானியின் முந்தைய படங்களான ‘ஷியாம் சிங்கா ராய்’, ‘அடடே சுந்தரா’ படங்கள் அமோக வரவேற்பினைப் பெற்றன. அதனைத் தொடர்ந்து வெளியான தசரா, ஹாய் நான்னா கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
இறுதியாக வெளியான, ‘சரிபோத சனிவாரம்’ (சூர்யாவின் சனிக்கிழமை) திரைப்படம் வெற்றிப் படமானது.
அடுத்ததாக, இயக்குநர் சைலேஷ் கொலனு இயக்கத்தில் ஹிட் - 3 படத்தில் நடித்து வருகிறார்.
மேலும், தசரா படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தன் 33-வது படத்தில் நடிக்கிறார். படத்திற்குத் தற்காலிகமாக நானிஒடேலா - 2 எனப் பெயரிட்டுள்ளனர். படத்தின் பூஜை சில நாள்களுக்கு நடைபெற்றது. இதில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. நானி நடித்த ஜெர்சி படத்திற்கும் அனிருத்தே இசையமைத்திருந்தார். தற்போது, இக்கூட்டணி மீண்டும் இணைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.