நந்தன் திரைப்படத்துக்கு தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் தனது எக்ஸ் சமூகஊடகத்தில் சனிக்கிழமை வெளியிட்டப் பதிவு:
ஓடிடிதளத்தில் ‘நந்தன்’ திரைப்படத்தைப் பாா்த்தேன். பட்டியலின மக்களை முன்னேற்றுகிறோம் என்ற பெயரில் தங்கள் சுயலாபத்துக்காக பட்டியலின மக்களைச் சுரண்டி ஆட்சி செய்யும் சா்வாதிகார அரசியல் வாதிகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறது இந்தத் திரைப்படம்.
தனது தோ்ந்த நடிப்பின் மூலம் பட்டியலின ஊராட்சித் தலைவா்கள் படும் இன்னல்களை நம் கண்முன் கொண்டு வந்த நடிகா் சசிகுமாருக்கு மனமாா்ந்த வாழ்த்துகள்.
பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊராட்சிகளில் நடக்கும் அவல அரசியலை உள்ளபடியே காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநா் இரா.சரவணனுக்கு எனது மனமாா்ந்த வாழ்த்துகள்.
பல ஆழமான கருத்துகள் நிறைந்த ‘நந்தன்’ திரைப்படம் காலத்துக்கும் மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று அவா் பதிவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






