மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜோதிகாவின் மகிழ்ச்சியை ஏன் பறிக்க வேண்டும்? வைரலாகும் சூர்யா!

ஜோதிகா குறித்து சூர்யா பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளன...

News image
சூர்யா - ஜோதிகா
Updated On :29 அக்டோபர் 2024, 2:53 pm

DIN

நடிகர் சூர்யா தன் மனைவி ஜோதிகா குறித்து பேசிய கருத்துகள் வைரலாகியுள்ளன.

நடிகர் சூர்யா கங்குவா திரைப்படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்தியா முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல மொழி ரசிகர்களிடமும் படத்தைச் சேர்ப்பதுடன் அதிக நேர்காணல்களில் கலந்துகொண்டு பல கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார்.

அப்படி, சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், நெறியாளர், “ஏன் மும்பைக்கு குடியேறிவிட்டீர்கள்?” எனக் கேட்டார்.

அதற்கு சூர்யா, "என் குடும்பத்துடன் நிறைய நேரங்களைச் செலவிட்டதில்லை. குழந்தைகள் விஷயத்திலும் அப்படித்தான். கணவன் மனைவியாக இருந்தாலும், ஜோதிகா எனக்கு உறுதுணையான மிகச்சிறந்த தோழி. வழிகாட்டி. ஜோதிகா 18 வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு நடிக்க வந்தவர். சினிமா, என் குடும்பம் என 27 ஆண்டுகள் சென்னை வாழ்க்கைதான். அவருக்கும் தன் பெற்றோருடன் இருக்க வேண்டும் என ஆசை இருக்காதா? ஆண்களுக்கு என்ன தேவைப்படுகிறதோ பெண்களுக்கும் அந்த விருப்பங்கள் இருக்கும். இதையெல்லாம் நான் மிக தாமதமாகவே புரிந்துகொண்டேன்.

இதையும் படிக்க: தலைவனே - கங்குவா பாடல் வெளியீடு!

ஜோதிகாவுக்கும் நண்பர்கள், சுயசம்பாத்யம், விடுமுறைகள் உள்பட பல தேவைகள் உண்டு. அதையெல்லாம் ஏன் நிராகரிக்க வேண்டும்? எல்லாமும் நமக்காகவே (ஆண்) இருக்க வேண்டும் என ஏன் நினைக்கிறோம்? அவர்களுக்கென வாழ்க்கையும் சுதந்திரமும் உண்டு. மும்பைக்குக் குடியேறிய பின்பே ஜோதிகாவுக்கு பாலிவுட்டில் ஸ்ரீகாந்த், டப்பா கார்டெல் உள்ளிட்ட கதையம்சமுள்ள படங்கள் கிடைத்தன. நிறைய அறிமுக இயக்குநர்களின் கதைகளைக் கேட்டு அவர்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது.

சூர்யா - ஜோதிகா

சூர்யா - ஜோதிகா

குழந்தைகளின் படிப்புக்குமான நகரமாக இருக்கிறது. நல்லவேளையாக இருவரும் நன்றாகப் படிக்கிறார்கள். மாதத்தில் 10 நாள்களாவது என் குடும்பத்துடன் இருக்க மும்பை வருகிறேன். இங்கு, என் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதும், நடைப்பயிற்சி செல்வதும், மகனுடன் கூடைப்பந்து விளையாடுவதுமாக இருக்கிறேன்.” எனத் தெரிவித்தார். சூர்யாவின் இந்த பேச்சு ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.