தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனா!

நடிகை ரவீனா காதலரை அறிமுகப்படுத்தியுள்ளார்.

Published On :

நடிகை ரவீனா ரவி விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.

டப்பிங் கலைஞராக இருந்து நடிகையாக உயர்ந்தவர் ரவீனா. முக்கியமாக, சமந்தா, எமி ஜாக்சன், காஜல் அகர்வால், மடோன்னா செபாஸ்டியன் உள்ளிட்ட தமிழ், மலையாளப் படங்களில் பல முன்னணி நாயகிகளுக்கு டப்பிங் குரல் கொடுத்தவர். இறுதியாக, ஜவான் படத்திற்காக நடிகை தீபிகா படுகோனுக்கு தமிழ்க் குரல் கொடுத்திருந்தார்.

நடிகை ரவீனா

நடிகை ரவீனா

நடிகையாகவும் லவ் டுடே, மாமன்னன், வட்டார வழக்கு உள்ளிட்ட படங்களில் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றவர்.

இந்த நிலையில், ரவீனா திருமணம் செய்ய உள்ளதை அறிவித்துள்ளார். மலையாளத்தில், ‘வாலாட்டி’ என்கிற படத்தை இயக்கிய தேவன் ஜெயக்குமாருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, “எப்போதும் உடனிருக்கும் ஒன்றை நாங்கள் இருவரும் கண்டுபிடித்திருக்கிறோம். எங்களின் கதையை எழுதத் துவங்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், இருவரும் திருமணம் செய்யவுள்ளது உறுதியாகியுள்ளது. இயக்குநரை திருமணம் செய்யும் ரவீனாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.