ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரம், தெலங்கானா வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1 கோடி வழங்கிய ஜூனியர் என்.டி.ஆர்!

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

News image
ஜூனியர் என்.டி.ஆர்
Updated On :3 செப்டம்பர் 2024, 10:26 am

DIN

ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணமாக நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் ரூ. 1 கோடி வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஆந்திரம், தெற்கு ஒடிஸா இடையே வங்கக்கடலில் கடந்த வியாழக்கிழமை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கரையைக் கடந்தது.

இதன் காரணமாக ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் கடந்த மூன்று நாள்களாக கனமழை நீடித்து வருகிறது. இரு மாநிலங்களிலும் இதுவரை மழை வெள்ளத்தில் 33 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வெள்ள நிவாரணம் தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் தெலுங்கில் பதிவிட்டுள்ள ஜூனியர் என்.டி.ஆர், “சமீபத்தில் பெய்த கனமழையால் இரு தெலுங்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் என்னை மிகவும் வருத்தமடையச் செய்தன.

இந்தத் துயரத்தில் இருந்து தெலுங்கு மக்கள் விரைவில் மீண்டுவர நான் பிரார்த்திக்கிறேன்.

இந்த நிலையில், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநில அரசுகளின் வெள்ளப் பேரிடர் மீட்பு நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவும் விதமாக இரு மாநில அரசுகளின் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு எனது சார்பில் தலா ரூ.50 லட்சம் வழங்குகிறேன்” என தெரிவித்துள்ளார்.

ஜூனியர் என்.டி.ஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் ’தேவாரா - பாகம் 1’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற செப். 27 அன்று இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.