லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

தும்பட் திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது...

Published On :

தும்பட் திரைப்படம் மறுவெளியீட்டிலும் அசத்தி வருகிறது.

இயக்குநர்கள் ஆனந்த் எல். ராய் மற்றும் ஆனந்த் காந்தி தயாரிப்பில் ரகி அனில் பார்கே இயக்கத்தில் உருவான திரைப்படம் தும்பட் (tumbbad).

சுதந்திர காலத்திற்கு முன் தங்கப் புதையலைத் தேடிச்செல்லும் நாயகன் (சோஹம் ஷா) எதிர்கொண்ட பிரச்னைகளை மையமாகக் கொண்டு ஹாரர் பாணியில் இப்படம் உருவானது.

2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீட்டில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனால், பலரும் படத்தை மறுவெளீயிடு செய்ய கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த செப். 13 ஆம் தேதி இந்தியளவில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் மறுவெளீடானது.

Story image

மறுவெளியீட்டில் இதுவரை ரூ. 21. 57 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுவெளியீடாகும் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. விதிவிலக்காக நடிகர் விஜய்யின் கில்லி ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, தும்பட் படமும் மறுவெளியீட்டில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.