சென்னை தலைமைச் செயலகத்தில் 3 பெண்கள் தற்கொலை முயற்சி! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி! கைதாகிறாரா?பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஓய்வு!ஓய்வை அறிவித்தார் அஜிங்க்யா ரஹானே! அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

மறுவெளியீட்டிலும் அசத்தும் தும்பட்!

தும்பட் திரைப்படம் மறுவெளியீடாகியுள்ளது...

News image
Updated On :23 செப்டம்பர் 2024, 1:45 pm IST

தும்பட் திரைப்படம் மறுவெளியீட்டிலும் அசத்தி வருகிறது.

இயக்குநர்கள் ஆனந்த் எல். ராய் மற்றும் ஆனந்த் காந்தி தயாரிப்பில் ரகி அனில் பார்கே இயக்கத்தில் உருவான திரைப்படம் தும்பட் (tumbbad).

சுதந்திர காலத்திற்கு முன் தங்கப் புதையலைத் தேடிச்செல்லும் நாயகன் (சோஹம் ஷா) எதிர்கொண்ட பிரச்னைகளை மையமாகக் கொண்டு ஹாரர் பாணியில் இப்படம் உருவானது.

2018 ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி கவனம் பெற்றாலும் பெரிய வெற்றியைப் பதிவு செய்யவில்லை. ஆனால், இதன் ஓடிடி வெளியீட்டில் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இதனால், பலரும் படத்தை மறுவெளீயிடு செய்ய கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த செப். 13 ஆம் தேதி இந்தியளவில் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இப்படம் மறுவெளீடானது.

Story image

மறுவெளியீட்டில் இதுவரை ரூ. 21. 57 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மறுவெளியீடாகும் திரைப்படங்கள் பெரிய வெற்றியைப் பெறுவதில்லை. விதிவிலக்காக நடிகர் விஜய்யின் கில்லி ரூ. 25 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

தற்போது, தும்பட் படமும் மறுவெளியீட்டில் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.