ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

தாயாகிறார் நடிகை யாமி கௌதம்! 

பிரபல பாலிவுட் நடிகை யாமி கௌதம் 5 மாதங்கள் கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 பிப்ரவரி 2024, 11:02 am IST

ஹிமாச்சலில் பிறந்த நடிகை யாமி கௌதம் முதலில் மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்து பின்னர் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். 

தற்போது ஹிந்தியில் முழுநேர நடியாக இருந்து வருகிறார். தனது முதல் ஹிந்தி படமான விக்கி டோனர் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். 

Story image

தமிழில் 2013இல் கௌரம் எனும் படத்திலும் 2016இல் ஜெய் உடன் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்திலும் நடித்துள்ளார். தமிழில் பெரிதாக ஹிட் அடிக்காத இவரது படங்கள் ஹிந்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றன. 

Story image

யாமி கௌதம், ப்ரியா மணி இணைந்து நடித்துள்ள ஆர்டிகள் 370 திரைப்படம் பிப்.23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தினை தயாரித்துள்ளார் யாமி கௌதமின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

2019இல் உரி- தி சர்ஜிகல் ஸ்டிரைக் படத்தினை இயக்கிய ஆதித்யா தார் படத்தில் நடித்தார். அங்கு ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மலர்ந்து 2021-இல் திருமணத்தில் முடிந்தது. 

இந்நிலையில் நடிகை யாமி கௌதம் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மே மாதம் குழந்தை பிறக்குமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இது குறித்து தயாரிப்பாளரும் யாமி கௌதமின் கணவருமான ஆதித்யா தார், “இது லட்சுமியா அல்லது கணேஷா என்பது தெரியவில்லை. ஆவலுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.