விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

சினிமாவில் பான் இந்தியா கலாசாரம் அசிங்கமானது: செல்வராகவன்

சினிமா குறித்து செல்வராகவன் பேசியது...

News image

செல்வராகவன்

Updated On :8 ஏப்ரல் 2025, 4:30 pm IST

இயக்குநர் செல்வராகவன் புதிய திரைப்படங்கள் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் திரைப்படங்களில் நடித்து வருவதுடன் அடிக்கடி தன் சமூக வலைதளக் கணக்குகள் வழியாக ரசிகர்களிடம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.

முக்கியமாக, ஊக்கமளிக்கும் வார்த்தைகளைத் தொடர்ந்து பேசி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய செல்வராகவன், “100 நாள்கள் ஓடிக்கொண்டிருந்த படங்களெல்லாம் இப்போது 3 நாள்களில் முடிந்து விடுகின்றன. மிக சுலபமாக ஒரு படத்தைக் குதறி, எங்களின் வாழ்க்கையையே காலி செய்கிறார்கள். இப்போது, பான் இந்தியா என்கிற அசிங்கமான கலாசாரம் வந்ததால் நல்ல சினிமா என்பதற்கான எல்லா வரையறைகளும் குறைந்து குத்துப் பாட்டுகள் கொண்ட கமர்சியல் படங்களே அதிகரித்துள்ளன. இதனால், ரசனையே இல்லாத இடம் நோக்கி நகர்கிறோம்.

எப்போது இறுதியாக ஒரு நல்ல படத்தை பார்த்தோம் என நினைத்துப் பாருங்கள். இன்று நல்ல படங்களை எடுக்க வந்தால் காணாமல் போய்விடுவோம் என்கிற எண்ணம் இருப்பதால் பலரும் கமர்சியல் பக்கம் திரும்பி விடுகின்றனர். ரூ. 1000 கோடி வசூலில்தான் கவனம் செலுத்துகின்றனர். நல்ல சினிமாக்கள் செத்தே விட்டன. கோபத்தில் சொல்லவில்லை, ஆதங்கத்தில் சொல்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.