பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

News image
Updated On :23 ஏப்ரல் 2025, 7:32 pm IST

விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

சிறகடிக்க ஆசை, ஐய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் மாலை 6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய தொடரான பூங்காற்றுத் திரும்புமா தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வரும் ஏப். 28 ஆம் தேதி இந்த புதிய நேரத்தின்படி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.