மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

சச்சின் மறுவெளியீட்டில் சாதனை! கில்லி வசூலை முறியடிக்குமா?

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் இன்று (ஏப்.18) மறுவெளியீடானது.

News image

சச்சின் பட போஸ்டர். - படம்: எக்ஸ் / கோபுரம் சினிமாஸ்.

Updated On :18 ஏப்ரல் 2025, 11:18 am IST

நடிகர் விஜய் நடித்த சச்சின் திரைப்படம் இன்று (ஏப்.18) மறுவெளியீடானது.

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கி 2005-ஆம் ஆண்டு வெளியான சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ். தாணு தயாரித்திருந்தார்.

சந்திரமுகி படத்துடன் இணைந்து வெளியானதால் பெரிய வெற்றியைப் பெறாவிட்டாலும் ஓரளவு நல்ல வசூலை இப்படம் பெற்றது.

காதல், நகைச்சுவை என அனைவராலும் ரசிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்களும் பெரிதும் கொண்டாடப்பட்டன.

இப்படம் வெளியாகி இந்தாண்டுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனால் மறுவெளியீடானது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் மட்டும் இதுவரை 52,000-க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையானதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு, “சச்சின் மறுவெளியீட்டில் சரித்திரம், சாதனை, சகாப்தம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Story image

விஜய் நடித்த கில்லி திரைப்படம் கடந்தாண்டு மறுவெளியீடு செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்த நிலையில் இந்தப் படமும் நல்ல வசூலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று மறுவெளியீடாகியுள்ள சச்சின் திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலோடு பார்த்து வருவதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.